சற்று முன்
Home / செய்திகள் (page 20)

செய்திகள்

க.பொ.உ பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது!

இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ...

Read More »

அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக, இவ்வருட தைப்பொங்கலை கருதுவதாக ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி

நாட்டின் உணவுப் பாதுகாப்பு, போஷாக்கை உறுதிசெய்யும் தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக, இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை கருதுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய ...

Read More »

உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும்  தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்

உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள். கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல்.சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி ...

Read More »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் 6 விரைவில் முடிவடையவிருக்கிறது. இதில் தற்போது அசீம்,சிவின், அமுதவாணன், மைனா, கதிர், விக்ரம், ஏடிகே உள்ளிட்டோர் வீட்டிற்குள் இருக்கின்றன. கடந்த வாரம் ரசித்தா வெளியேறிய நிலையில் அடுத்ததாக யார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் ...

Read More »

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது: கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம்

முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கட்டாயம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்ததன் பின்னர் இதற்கான டென்டர் அழைப்பின் போது அதற்காக முன்வந்த சர்வதேச விநியோகஸ்தர்களில் நூற்றுக்கு 90 சதவீதமானோர் இந்திய விநியோகஸ்தர்கள் என தெரிவிக்கப்படுகிறது. முட்டைகளை இறக்குமதி செய்வதில் எவ்வித ...

Read More »

சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்த சீன பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென்-சூ உள்ளிட்ட உயர்மட்டக் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (14) காலை இலங்கை வந்தடைந்தது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசாங்க பிரதானிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.

Read More »

உதயமானது தமிழ் கட்சிகளின் புதிய கூட்டணி – குத்துவிளக்கு சின்னத்தில் போட்டி

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் 12.20 மணியளவில் கைச்சாத்திட்டனர்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளது.யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர்கட்சிகளின் தலைவர்களால் புதிய ...

Read More »

காலில் Surgery செய்யப்பட்ட சீரியல் நடிகை ஆல்யா மானசா

சின்னத்திரையில் சில வருடங்களுக்கு முன் காலடியடுத்து வைத்து ஒரு கலக்கு கலக்கிவரும் நடிகை. ராஜா ராணி என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அந்த சீரியலை தொடர்ந்து திருமணம், குழந்தை என பிஸியாக இருந்தார். பின் ராஜா ராணி 2 தொடரில் நடிக்க தொடங்கிய இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு ...

Read More »

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும்  கொடுப்பனவுகளில்  எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சேமநல கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை. அந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரச வருமானம் மற்றும் செலவுகளை நிர்வகிப்பதில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

நாளைய தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இன்று யாழ். வருகை!

நாளைய தினம் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். தேசிய பொங்கல் விழா நாளை நல்லூர் சிவன் ஆலய பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குகிறார். இந்தப் பொங்கல் விழாவில் பங்கேற்க, வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அமைச்சர்கள், இராஜாங்கஅமைச்சர்கள், பாராளுமன்ற ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com