வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(03.07.2016) அன்று காலை 10.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின்போது வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட 1000 பட்டதாரிகளை வடமாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமிப்பது தொடர்பான அறிவிப்பு, நாடளாவியரீதியில் க.பொ.த ...
Read More »2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மெதவத்த பகுதியில் 1995ஆம் ஆண்டு 01 மாதம் 26ம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடா்புடைய 2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஆச்சாரி சுமுது பிரேமசந்திர 30.06.2016 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 1995ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையுடன் ...
Read More »கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சேமிப்பு மாதமாக யூலை மாதம் பிரகடனம்
வடமாகாண கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சேமிப்பு மாதமாக வடமாகாண கூட்டுறவு அமைச்சால் யூலை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு மே மாதம் 15ஆம் திகதியில் இருந்து 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஒரு திட்டமாகவே, கூட்டுறவாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக, யூலை 1 தொடங்கி ...
Read More »வர்த்தக நடவடிக்கையில் ஏமாற்றப்படுதல் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய பிரிவு
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்றினை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அரச அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறைப்பாட்டுப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேற்படி முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பாக புலனாய்வு அதிகாரி மு.றம்ஸீன் அவர்களுடன் புலனாய்வு ...
Read More »எந்த ஒரு சவால்களை எதிர்கொள்ள பொதுபல சேனா அமைப்பு தயாராகவுள்ளது – டிலந்த விதானகே
மஹியங்கனை விவகாரம் தொடர்பில் ஞானசார தேரருக்கு விடுக்கப்படும் எந்த ஒரு சவால்களை எதிர்கொள்ள பொதுபல சேனா அமைப்பு தயாராகவுள்ளதாக அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டார். மஹியங்கனை சம்பவம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் … மஹியங்கனையில் அளுத்கமை போன்ற கலவரம் உருவானால் அதற்கு ...
Read More »மத்திய வங்கி புதிய ஆளுநர் நியமனம் ஒத்திவைப்பு
மத்திய வங்கி ஆளுனராக பதவி வகிக்கும் அர்ஜுன் மஹேந்திரனுக்கு பதிலாக புதிய ஆளுனர் இன்று நியமிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு இந்த நியமனம் வழங்கப்படமாட்டாது என அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன. மத்திய வங்கி முறிகள் தொடர்பான அறிக்கை இன்று கோப் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள கோப் குழு அறிக்கை ...
Read More »வித்யா கொலை வழக்கில் முக்கிய சாட்சி
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளதாகவும் அவரிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம் ...
Read More »சமஷ்டி வந்தால் தமிழீழம் மலரும் – தேரர் எச்சரிக்கை
சமஷ்டி நிர்வாகம் உருவானால் ஈழம் உருவாகும் என்று எல்லே குணவன்ச தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பொது நூலகத்தில் சமஷ்டி நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே எல்லே குணவன்ச தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்- பஞ்சமகா சக்திகளின் ஒன்றிணைந்த கட்சியாக திகழ்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது இந்தியா, ...
Read More »மட்டக்களப்பில் 1,355 மில்லியன் செலவில் மீள்குடியேற்றம்!
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் நேற்று (27) மாலை மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இவ் மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், ...
Read More »தேரர் உட்பட மூவர் விளக்கமறியலில்
வெலிமடை திவுரும்பொல ரஜமகா விகாரையிலுள்ள பழமை வாய்ந்த அரச மரத்தை வெட்டி பலகை அறுத்த விகாராதிபதி உட்பட மூவர் கடந்த ஏப்ரல் 29ம் திகதி கைது செய்யப்பட்டிருந்ததோடு இவர்கள் 27.06.2016 அன்று வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதி வரை அவர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறு வெலிமடை நீதவான் தம்மிக்க ...
Read More »