(25.09.2015) இலங்கையில் மத்திய மகாணத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த மண் சரிவில் சிக்கி ஐந்து பேர் உயரிழந்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திலுள்ள வெதமுலவத்தை பகுதியில் ஏற்பட்ட இந்த மண் சரிவிற்குப் பிறகு நான்கு பேர் காணமாற் போயுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்த பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாகவே இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.