சற்று முன்
Home / பதிவுகள் / தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் யாழ் வருகை – படங்கள்

தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் யாழ் வருகை – படங்கள்

”வாருங்கள் ஒன்றாய் சுவாசிப்போம்” என்ற கருத்தினைத் தாங்கியவாறு யாழ்ப்பாணம் வந்த ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் உட்பட தெற்கின் 90இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து யாழ்தேவியில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து . மாலை 05 மணியளவில் யாழ்ப்பாணம் வந்தடைந்து வடக்கின்  ஊடகவியலாளர்களுடன் இணைந்து இரு தினங்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

மதத்தலைவர்களைச் சந்தித்தல், முதலமைச்சரைச் சந்தித்தல், ஆளுநரைச் சந்தித்தல், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைத்தல், காணாமல்போன மற்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவிளலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு, பலாலியில் படை அதிகாரிகளுடனான சந்திப்பு, ஊடகச் செயலமர்வு, சான்றிதழ் வழங்குதல், கலாச்சார நிகழ்வுகள், கடன் அடிப்படையிலான மோட்டார்வாகனம் வழங்கல், பாதிக்கப்பட்ட ஊடககுடும்பங்கள் மூன்றிற்கு வீடு அமைக்கும் அடிக்கல் நாட்டல் வைபவம், நாகவிகாரை, நயினை நாகபூசனி அம்மன் ஆலய வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com