பிதிர்க்கடன் செலுத்தவரும் இந்துக்கள் கீரிமலை தீர்த்தக்கடலில் நீராடும்போது அங்கு காணப்படும் கடற்பாறைகளினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் அவற்றினைச் சீர்செய்வதற்கு மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சிடமிருந்து 5.6 மில்லியன் ரூபாய் நிதியினை ஒருக்கியுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட அரச அதிபர் திரு.நா.வேதநாயகன் இவ்வேலைத்திட்டமானது கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு,
ஊடக அறிக்கை
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலுள்ள கீரிமலை தீர்த்தக்கடலானது இந்து மக்கள் ஆடி அமாவாசை தினத்தில் பிதிர்க்கடன் செலுத்துவதில் முக்கியம் வாய்ந்த இடமாகும்.
இவ்வாறு விசேட தினங்களில் தீர்த்தக்கடலில் நீராடுபவர்கள் அங்கு காணப்படும் கடற்பாறைகளினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இதன் முக்கியத்துவத்திற்காக இந்து அமைப்புக்களால் மேற்படி விடயம் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை சீர்செய்வதற்கென மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சிடமிருந்து 5.6 மில்லியன் ரூபாய் இவ்வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டமானது கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நா.வேதநாயகன்,
அரசாங்க அதிபர்,
மாவட்ட செயலகம்,
யாழ்ப்பாணம்.