சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் நெருக்கடிக்கு சமமான நியாயமான தீர்வை வழங்குவதற்கு அனைத்து கடன் வழங்குநர்களும் ஒப்புக்கொள்ளும் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கு அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.