சற்று முன்
Home / செய்திகள் / உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் இலங்கைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்!

உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் இலங்கைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்!

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் குறிப்பிட்டுள்ளது போன்று அடுத்த வருடம் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாடாக இலங்கை பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு நெருக்கடி
உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பல பல நெருக்கடிகளை இலங்கையும் சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படலாம்.

உணவு பிரச்சினை ஏற்படலாம். ஏற்கனவே மிக பெரிய அளவில் வீழ்ந்து போயுள்ள இலங்கை போன்ற நாட்டிற்கு இன்னும் விழுவதற்கு சிறிய அளவே உள்ளது. இதனால் இதன் தாக்கத்தை இதற்கு மேலும் உணரும் அளவிற்கான தைரியம் மக்களிடம் இல்லை.

சரியான திட்டமிடல்
இந்த நிலையில் மீண்டு வருவதற்கு உரிய முறையில் கொள்கைகளை தயாரிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்று மீண்டு வருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com