மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று (17) அதிகாலை 01.30 அளவில் நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெற்காசிய புலம்பெயர்ந்தோர் (டயஸ்போரா) மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாள் நிகழ்வாக நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளில் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் சிங்கப்பூர் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.