சற்று முன்
Home / இந்தியா / கல்வான் பள்ளத்தாக்கில் சக்தி வாய்ந்த பீரங்கியை நிறுத்தியது இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கில் சக்தி வாய்ந்த பீரங்கியை நிறுத்தியது இந்தியா

லடாக் எல்லையில் சீனாவின் படைக்குவிப்பை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை நிறுத்தியுள்ளது.

துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது.

ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும். சீனா படைகளை குவித்ததை தொடர்ந்தே இந்தியாவும் படைகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15ஆம் திகதி ஊடுருவ முயன்ற சீன இராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பாக இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை மீளப்பெற இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகியுள்ளன. மேலும் சீனா தனது உரிமைகோரும் பகுதியை தாண்டி 423 மீட்டர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளமை அந்த படங்களில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா தனது சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உல­கில் பாது­காப்பு நில­வு­வதை உறுதி செய்ய ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வதே இந்­தத் தரு­ணத்­தின் தேவை: மோடி

உல­கில் அமைதி, நல்­லி­ணக்­கம், பாது­காப்பு நில­வு­வதை உறுதி செய்ய ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வதே இந்­தத் தரு­ணத்­தின் தேவை ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com