இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் 60 வயதுடைய ஒருவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.
“நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்தார். அஅவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதால் தனியார் வைத்தியசாலையிலிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு இன்று மாற்றம் செய்யப்பட்டார். அவர் இருதய நோயாளி என்பதுடன் நீண்டகாலமாக சுவாசக் கோளாறுடன் சிகிச்சை பெற்று வந்தவராவார்” என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.