சற்று முன்
Home / செய்திகள் / சிறிதரனுக்கு கொரோனா தொற்று இல்லை !

சிறிதரனுக்கு கொரோனா தொற்று இல்லை !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை தவவல்கள் வாகீசத்திற்குத் தெரிவித்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை நோய் காரணமாக இன்று காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா சந்தேகத்தின் காரணமாக அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப்பிரிவில் பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே நேற்று வேட்புமனு தாக்கல் செய்த சிறிதரன் தேர்தல் பிரச்சாரத்தை நோக்காகக் கொண்டு ஊடகங்களில் பிரபல்யம்  தேடுவதற்காக திட்டமிட்டு சிகிச்சைக்கு சென்றதாக சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com