சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் பிரதமருமான டி.எம்.ஜயரத்ன காலமானார்.
சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அவர் தனது 88 வது வயதில் காலமானார்.
2010 ம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை அவர் பிரதமராக பதவி வகித்திருந்தார். குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச செயற்பட்டிருந்ததோடு அவரே டி.எம்.ஜயரத்னவை பிரதமராக நியமித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.