முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2017ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்ட் இயக்குபவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பூஜித் ஜயசுந்தர இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.
அவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டார். அவரை 2 லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.