சற்று முன்
Home / செய்திகள் / அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிரான மனு மீண்டும் விசாரணைக்கு!

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிரான மனு மீண்டும் விசாரணைக்கு!

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி உரையாடல்களை அழித்தமை மற்றும் திரிவுபடுத்திய சம்பவம் தொடர்பில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஆகஸ்ட் 29ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. 

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு உள்வந்த மற்றும் வௌிச்சென்ற தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இருவெட்டு வழங்கப்பட்டது. 

இதன்போது தொலைபேசி உரையாடல்க் அழித்தமை மற்றும் திரிவுபடுத்தியமை தொடர்பில் தெரிய வந்தது. 

அதன்படி இது சம்பந்தமாக விசாரணை செய்யுமாறு ஆணைக்குழு பொலிஸாருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பான இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையையும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையையும் எதிர்வரும் 29ம் திகதி மன்றில் சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com