சற்று முன்
Home / செய்திகள் / பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்தா!

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்தா!

Gotabaya Rajapaksa

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக் ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என்று  கூட்டு  எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். 

அதற்கு முன்னர் நாடு முழு­வதும்  ஜனா­தி­பதி வேட்­பாளர்  தொடர்பில் நாடு முழு­வதும் மக்கள்  மத்­தியில்  தெ ளிவு­ப­டுத்தும் கூட்­டங்கள் நடத்­தப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  அண்­மையில் ஆற்­றிய உரையின் ஊடாக சில விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு தயா­ரா­கி­யுள்­ளமை தெ ளிவா­கின்­றது  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் மற்றும்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கூற்று  என்­பன குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். 

கூட்டு  எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல  இது குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் 

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் கௌர­வ­மான தீர்­மானம் ஒன்றை எடுப்பேன் என்று ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­ததன் மூலம் அவர் சில விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு தயா­ரா­கி­யுள்ளார் என்­பது தெரி­கின்­றது. 

அத்­துடன்  எதிர்­வரும் ஜனா­தி­பதி  தேர்­த­லா­னது இரு­முனை போட்­டிக்­க­ள­மா­கவே அமையும் என்ற விட­யத்­தையும்     ஜனா­தி­ப­தியின் உரை  வெ ளிப்­ப­டுத்­து­கின்­றது.  

எப்­ப­டி­யி­ருப்­பினும் எமது ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஷ என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம்.   இதனை சுதந்­திரக் கட்­சியும் ஏற்­றுக்­கொள்ளும் என்­பதே எமது எண்­ண­மாகும். சுதந்­திரக் கட்­சியில் இருக்­கின்ற சிலர்  ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்­து­கொள்ளும்  சாத்­தி­யமும் உள்­ளது. ஆனால் அதி­க­மானோர்  எமது பக்கம் வந்­து­வி­டு­வார்கள். 

மேலும்  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக்ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

பொது­ஜன பெர­மு­னவின்   சம்­மே­ளனம் எதிர்­வரும் ஆகஸ்ட்  மாதம் ஏழாம் திகதி  நடை­பெறும். இந்த சம்­மே­ளனக் கூட்­டத்தில்  மஹிந்த ராஜ­பக்ஷ இந்த அறி­விப்பை வெ ளியி­டுவார் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

அதற்கு முன்னர்  நாங்கள் நாட­ளா­விய ரீதியில்  எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த பிரசார  செயற்பாடுகளை நடத்துவோம்.   அவ்வாறு நாடு முழுவதும் மக்களின்  கருத்துக்களை பெற்ற பின்னர்   மஹிந்த  ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார். அவர் .கோத்தபாய ராஜபக்ஷவாகவே இருப்பார் என்றார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com