யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதிகளுடன் காணப்படுவதாகதாக வதந்திகள் பரப்பப்பட்டதால் யாழ் போதனா வைத்தியசாலைப்பகுதி அல்லோல கல்லோலப்பட்டது.
இது தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் குறித்த கார் வைத்திய சாலைக்கு வந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.