சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / குப்பைக்கு மூட்டிய தீயால் மரங்கள் எரிந்தன.

குப்பைக்கு மூட்டிய தீயால் மரங்கள் எரிந்தன.

குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் சுமார் மூன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 
காரைநகர் சுயம்பு வீதியில் , காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக உள்ள காணியில் குப்பைகளை குவித்து அதற்கு தீ மூட்டியுள்ளனர். குறித்த தீ வேகமாக எரிந்து அருகில் இருந்த பனைமரங்கள் மற்றும் ஆல மரம் என்பவற்றுக்கு பரவியுள்ளது. 
அதனை அடுத்து மின்சார சபைக்கு அறிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேவேளை காரைநகர் பிரதேச சபைக்கும் அறிவிக்கப்பட்டது. பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என தீயை கட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தனர். மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com