சற்று முன்
Home / செய்திகள் / விசேட அதிரடிப்படை மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் – அரியாலையில் சம்பவம்

விசேட அதிரடிப்படை மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் – அரியாலையில் சம்பவம்

அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.

“அரியாலை கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முறிக்க சிறப்பு அதிரடிப்படையினர் நேற்றிரவு அங்கு சென்றிருந்தனர்.

அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் அங்கு விரைந்தனர். விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் உடன் தொரடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான
இரண்டு சவல்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com