சற்று முன்
Home / சினிமா / அஜித்தின் புதிய படம் “நேர் கொண்ட பார்வை”

அஜித்தின் புதிய படம் “நேர் கொண்ட பார்வை”

நடிகர் அஜித் குமாரின் புதிய படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடித்து வரும் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதை ‘சதுரங்கவேட்டை, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய, வினோத் குமார் இயக்கி வருகிறார். இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்து வெற்றிபெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியாகிறது.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் அறிமுகமாகிறார். படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில், படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரின் கோட் போட்ட அஜித் முறைப்பது போன்ற தோற்றத்தில் இருக்கிறார். அதேபோல், நீதிமன்ற விசாரணை கூண்டிலில் மூன்று இளம் பெண்கள் இருக்கிறார்கள். மூன்று பெண்களின் மத்தியில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இருக்கிறார்.

இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் #AK59 ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com