யாழ். கொக்குவில் பகுதியில் வீட ஒன்றில் பொருத்தப்பட்ட சிசிடிவி காணொளிக் கருவியை அகற்றுமாறு கூறி குறித்த வீட்டாருக்கு முகவரியிட்டு ஆவா குழுவினரால் தபாலில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணாளிக் கருவியால் ஆவாக் குழுவினரான தங்களது நடமாட்டம் கண்காணிக்கப்படுவதாகவும் அதனால் தமது சகாக்கள் சிலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள குழுவினர் எனவே குறித்த சி.சி.ரி.வி காணாளிக் கருவி உடனடியாக அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கடிதம் நேற்று கொக்குவில், ஆடியபாதம் பகுதியை சேர்ந்த செல்வரன்சன் என்பவருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தங்க வீட்டுக்கு முன்னாடி ஈக்கின்ற (வாசலுக்கு முன்னாட்டி) கமராவை தாமதிக்காமல் உடனடியாக கழற்ற்வும், அல்லது வீதி பாக்காமல் உள்ளே பூட்டவும் நம்ம தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க. ஆகவே உடனடியாக மாத்தவும் இந்த எச்சரிக்கை மீறினால் உங்கள் மீது தாக்குதல் விரைவாக நடாத்தப்படும்.” – என்றுள்ளது.