இலங்கையில் 1983ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனக்கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்காக பிரித்தானியாவில் உள்ள இலக்கம் 10 டவுணிங்க் வீதி , வெஸ்ட்மினஸ்டர் என்னும் இடத்தில் புலம்பெயர் மக்களால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழர்கள் மனதில் என்றும் மறவாத கலவரமான இந்தக் கறுப்பு ஜூலை தினமானது 35 ஆவது நினைவேந்தல் தினமாக பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.