சற்று முன்
Home / செய்திகள் / பட்டதாரிகள் நியமனம் தாமதமாகுமா ? பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு !!

பட்டதாரிகள் நியமனம் தாமதமாகுமா ? பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு !!

நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டபோதிலும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் இடப்பாடுகள் தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நியமனம் வழங்குவது மேலம் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் பயிற்சியாளர்களாக உள்ளீர்ப்புச் செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த ஏப்பிரல் மாதம் நாடுமுழுவதிலும் உள்ள மாவட்டச் செயலகங்கள் ஊடாக நடத்தப்பட்டன.

குறித்த நேர்முகத் தேர்வுகளில் அறநெறி மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பார்க்கப்பட்டன. க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண சான்றிதழ்கள் உள்ளிட்டதாக மேலதிக பட்டச் சான்றிதழ்களில் கூட நேர்முகத் தேர்வுகள் நடத்தியவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில் பட்தாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட சான்றிதழ்களின் பிரதிகளைப் பரிசீலித்தபோது பல பட்டதாரிகள் க.பொ.த சாதாரண தரத்தில் கணிதபாடத்தில் சித்தியடைந்தமைக்கான சான்றிதழ்களைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கணித பாடத்தில் சித்தியடையாது எவ்வாறு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்தார்கள் என்பது தொடர்பில் அதிகாரிகள் தற்போது குழப்பமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றினை எவ்வாறு மீள் பரிசீலனை செய்வது பட்டதாரிகளுக்கான நியமனங்களை எவ்வாறு துரிதப்படுத்துவது என்பது தொடர்பில் இறுதி முடிவினை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அது தொடர்பில் காத்திருப்பாதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com