ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் எடுத்த வீடியோ ஒன்றில் போராட்டக்காரர்களைச் சுட்டுக்கொல்லும் பொலிசாரின் ஒருவர் ஒருத்தனாவது சாகணும் எனக் கூறும் குரல் பதிவுடன் கூடிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்கள் அங்கும் இங்கும் ஓட போலீஸ் வேன் மீது காவலர் ஒரு துப்பாக்கியுடன் ஏறுகிறார். அப்போது பின்னால் இருந்து ஒரு நபரின் குரல் கேட்கிறது. அந்த நபர், ஒருத்தனாவது சாவணும் என்கிறார். அவர் அவ்வாறு கூறி முடிக்க, வேன் மீது ஏறிய காவலர் குறி பார்த்து சுட, துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு பாய்கிறது. அந்த குண்டு யார் மீதும் பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுத்தியதா? என்பது தெரியவில்லை.
ஆனால், ஸ்டெர்லைட் கலவரத்துக்கு காவல்துறையே காரணம். கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தும்போது வானத்தை நோக்கிச் சுட்டு மக்களை அச்சுறுத்தலாம், கால்களில் சுடலாமே தவிர நெஞ்சு, தலை, வாய் என்று குறிவைத்து சுடக்கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கூறிவரும் நிலையில், ஒருத்தனாவது சாவணும் என்ற அந்த குரல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதேவேளை குறித்த சினைப்பர் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்த பொலிஸ் அணி தூத்துக்குடி ஆட்சியருடன் இணைந்து எடுத்துள்ள குழு புகைப்படங்களும் இணையங்களில் வரைலாகி வருகிறது.