சற்று முன்
Home / செய்திகள் / எவரெஸ்ட் சிகரம் தொட்டார் இரண்டாவது இலங்கையர் !!

எவரெஸ்ட் சிகரம் தொட்டார் இரண்டாவது இலங்கையர் !!

இலங்கையை சேர்ந்த ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையராக பதிவாகியுள்ளார்.

நேபாள ​நேரத்தின் படி இன்று (22) காலை 5.55 மணியளவில்அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முற்பட்டு அதனை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்று அந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சிகரத்திற்கு ஏறுவதற்கு போதுமான ஒக்சிஜன் இல்லாமல் போனமையே அவரால் கடந்த 2016ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை ஏற முடியாமல் போனமைக்கு காரணமாகும்.

கடந்த 2016ம் ஆண்டு ஜொஹான் பீரிஸுடன் எவரெஸ்ட் ஏறிய ஜயந்திகுரு உதும்பொல எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதலாவது இலங்கையர் என்ற சாதானையை நிலைநாட்டினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com