தமிழர்க்குத் தீர்வு “தனித் தமிழீழம் அமைப்பதே” எனும் வரலாற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று.
யாழ்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழர்க்குத் தீர்வு தனித் தமிழீழம் அமைப்பதே எனும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர்.
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.
அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்பவையே அத் தீர்மானங்கள்