சற்று முன்
Home / பிரதான செய்திகள் / வைத்தியசாலையில் இராணுவம் கைது செய்த கணவனை காணவில்லை. – மனைவி சாட்சியம்.

வைத்தியசாலையில் இராணுவம் கைது செய்த கணவனை காணவில்லை. – மனைவி சாட்சியம்.

வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு துறையை சேர்ந்த காந்தி என அழைக்கப்படும், நல்லையா மகேஸ்வரன் என்பவரை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற பின்னர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.

தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

எனது கணவர் 2009ம் ஆண்டு 5ம் மாதம் 16ம் திகதி காயமடைந்து வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வேளை அங்கு இராணுவத்தினருடன்  புலிகள் அமைப்பின் புலனாய்வு துறையை சேர்ந்த ஒருவர் எனது கணவரும் புலனாய்வு துறையை சேர்ந்தவர் என அடையாளம் காட்டினார்.

அதனையடுத்து எனது கணவரை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றனர். அதன் பின்னர் கணவரை பற்றிய எந்த தகவலும் இல்லை. என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com