சற்று முன்
Home / செய்திகள் / காணாமல் போயிருந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் கிணற்றில் சடலமாக மீட்பு – சண்டிலிப்பாயில் சம்பவம்

காணாமல் போயிருந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் கிணற்றில் சடலமாக மீட்பு – சண்டிலிப்பாயில் சம்பவம்

கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் இன்று (04) சங்குவேலி வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலத்தில் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றதோடு, குறித்த இளைஞன், கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவர், சண்டிலிப்பாயைச் சேரந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு எனும் 20 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கூலி வேலைக்குச் செல்லும் குறித் இளைஞனை, நேற்று முன்தினம் (02) முதல் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com