சற்று முன்
Home / செய்திகள் / ஆணைக்குழுவில் முன்னிலையான ரணிலிடம் ஒரு மணிநேர விசாரணை !!

ஆணைக்குழுவில் முன்னிலையான ரணிலிடம் ஒரு மணிநேர விசாரணை !!

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலையாகி விளக்கமளித்தார்.

இன்று காலை ஆணைக்குழு முன்பாக முன்னிலையான இலங்கை பிரதமர், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சுமார் ஒரு மணிநேரம் பதிலளித்தார்.

அவருடன், ஐதேக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கு முன்னிலையாகியிருந்தனர்.

 

ஆணைக்குழு முன்பாக விளக்கமளித்து விட்டு வெளியே வந்த ரணில் விக்கிரமசிங்க, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது,

“மறைப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. ஆணைக்குழுவிடம் எல்லா விடயங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளேன்.

பாதையில்சில தவறுகள் இருந்தாலும், நல்லாட்சி தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் பிரதமர் பதவியில் உள்ள ஒருவர், இதுபோன்ற ஆணைக்குழு முன்பாக விளக்கம் அளித்திருப்பது முதல்முறையாகும்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழு முன்பாக தாம், முன்னிலையாகி விளக்கமளிக்க விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com