வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை செஞ்சோலை சிறுவர்கள் வடக்கு மாகாண சபையில் சந்தித்து இன்று (10) கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது சிறுவர் இல்லத்துக்கு தேவையான தளபாடங்கள், மற்றும் குடிநீர் வடிகடும் இயந்திரம், படிப்பகம் என பலவற்றை தமக்கு வழங்க வேண்டும் என சிறுவர் இல்ல மாணவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் தமக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க வேண்டும். எனவும் அந்த கடிதத்தின் பிரகாரம் உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சிறுவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.