இன்று 23.07.2017 எதிர்கட்சித்தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கொழும்பில் சந்தித்துக் கூடிப் பேசியுள்ளார்கள். இந்த சந்திப்பின் போது ஏனைய விடயங்களுடன் வடமாகாணசபையின் தற்போதைய நிலைமையும் பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு எழுந்துள்ள நிலைமை பற்றி முடிவுகளை எடுக்க முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அது வரையில் வடமாகாணசபையில் முன் மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட சபையில் எழும் ஏனைய முரண்பாட்டுக்கமைவான கருமங்கள் பிற்போடப்படுவது தேவை என்றும் இணக்கம் காணப்பட்டது.