வடக்கில் காணிவிடுவிப்புக்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாவும் தற்போது காணிக்காகப் போராடுபவர்கள் மேலதிக காணிகளிற்காகவே போராடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக வலி வடக்கு மீள் குடியேற்ற சங்கத்தின் தலைவர் சஜீபன் தெரிவித்துள்ளார். 2015 இல் வலிவடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய ஜனாதிபதி இன்று அவை எவற்றையும் நிறைவேற்றவில்லை. ஆனால் இன்று நாம் மேலதிக காணிகளுக்காகப் போராடுவதாகத் தெரிவித்துள்ளார். இது தெரடா்பில் அவர் யாழ்ப்பாணம் வரும்போது மக்களை ஒன்றுதிரட்டி ஜனாதிபதிக்கு எதிராக மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.