புதுவருடத்தை ஒட்டி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சிநேகபூர்வ ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 11மணியள வில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது 1000 பாட சாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளும் வழங்கப்பட்டது.