சற்று முன்
Home / செய்திகள் / நாங்கள் ஜெனீவாவில் செய்யவேண்டியதை செய்துவிட்டோம் தற்போது செல்பவர்கள் புகைப்படம் எடுத்துவிட்டு வரட்டும்

நாங்கள் ஜெனீவாவில் செய்யவேண்டியதை செய்துவிட்டோம் தற்போது செல்பவர்கள் புகைப்படம் எடுத்துவிட்டு வரட்டும்

ஜெனீவாவினில் சென்று செய்யவேண்டியவற்றினை நாங்கள்  செய்துவிட்டு வந்துவிட்டதால் திரும்பி அங்கு செல்லவேண்டியிருக்க தேவையில்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
தமிழ் மிரர் பத்திரிகையாசிரியர் ஏ.பி.மதனால் எழுதப்பட்ட நூல் வெளியிட்டு நிகழ்வினில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சார்பினில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்திருந்தார்.பிரதம விருந்தினராக இலங்கைப்பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் அரச அமைச்சர்கள் மனோகணேசன்,ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்
முன்னதாக ஊடகவியலாளர்களிடையே கருத்து வெளியிட்ட அவர் ஜெனீவாவினில் சென்று செய்யவேண்டியவற்றினை நாங்கள் செய்துவிட்டதால் திரும்பி அங்கு செல்லவேண்டியிருக்க தேவையில்லையென தெரிவித்த அவர் இப்போது செல்பவர்கள் புகைப்படமெடுக்க செல்வதாக தெரிவித்தார்
இதனிடையே மனோகணேசன் தனது ருவிட்டரில் தெரிவித்தது பொய்யெனவும் கூட்டமைப்பு வடகிழக்கு இணைப்பினை கைவிடவில்லையெனவும் ஒற்றையாட்சியினுள் தீர்வுக்கு சம்மதிக்கவில்லையெனவும் மேலும் தெரிவித்தார்.

ஜெனீவா சென்ற சுமந்திரன் இலங்கை அரசிற்கு இருவருட கால அவகாசம் கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் அதனை வைத்தே தற்போது செல்பவர்களால் தாங்கள் வழங்கிய கால அவகாச ஒப்புதலிற்கு எதிராக எதும் செய்யமுடியாது என்ற சாரப்பட பேசியிருக்கலாம் என தெரியவருகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com