கோயம்புத்தூரை அடிப்படையாகக் கொண்ட மலையாள திருநங்கை அஞ்சலி அமீர் தான் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் நபர் ஆவார். இவருக்கு சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி அமீன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திருநங்கையாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பின்னர் கேரளாவிலிருந்து கோவைக்கு வந்து மாடலாக மாறியவர். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருந்து வந்தது. ஆனால் இவர் திருநங்கை என தெரிந்ததால் அதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை.
ஆனால் இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்க ஆரம்பித்தார். பின்னர் விளம்பர படங்களிலும் சில வாய்ப்புகள் வந்ததால் இவர் அவைகளிலும் நடித்து வந்தார். பின்னர் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது அவர் திருநங்கை என தெரியவந்ததால் அந்த சீரியலையே கைவிட்டு விட்டனர். இதனால் அஞ்சலி அமீன் குறித்து செய்திகள் வெளியாகி அதன் மூலமே மம்மூடிக்கு ஜோடியாக நடிக்க அழைப்பு வந்ததுள்ளது.
மம்மூட்டி நடிப்பில், டைரக்டர் ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலி அமீன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படபிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் மற்றும் பிற தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது.
பேரன்பு படமானது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.