சற்று முன்
Home / செய்திகள் / பட்டதாரிகள் போராட்டம் வாபஸ்

பட்டதாரிகள் போராட்டம் வாபஸ்

143 ஆவது நாளாக அரச நியமம் வழங்கக் கோரி போராட்டம் மேற்கொண்டுவந்த வடக்கு மாகாண பட்டதாரிகள் நேற்று தமது போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள பட்டதாரிகள் தெரிவித்ததாவது, கடந்த மாதம் எம்மைச் சந்தித்த ஜனாதிபதியும் பிரதமரும் போராட்டத்தை தற்காலிகமாகவேனும் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்போது எங்களுக்கு எழுத்துமூல உறுதிமொழி ஏதும் தரப்பட்டால் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் எனக் கூறியிருந்தோம். இந்நிலையில் கடந்த வாரம் பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கும்வகையில் அமைச்சரைவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதற்கு மதிப்பளித்து ஒரு மாத காலத்திற்கு எமது போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com