சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம்

மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம்

மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரின் தீர்மானம் ஏகமனதான நிறைவேற்றம்

——————————————————-

மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம். ஊர்காவற்றுறை பிரதேச சபையில் கே.ஞானேஸ்வரன் கொண்டுவந்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது.
இன்று (06) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊர்காவற்றுறை பிரதேச சபைக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த புளியங்கூடல் வட்டார பிரதேச சபை உறுப்பினர் திரு கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்களால் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.

புகையிலையை மட்டுமே நம்பியதாக தீவக விவசாயம் காணப்படும் நிலையில் புகையிலைத் தடையானது தீவகத்தில் விவசாயிகளின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்ளாமல் தடைகளை அமுலாக்குவது சாத்தியமானதல்ல.
எனவே நிரந்தர வாழ்வாதாரத்தை புகையிலைக்கீடாக கொண்டு செல்லக்கூடிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தாத வரை புகையிலைத் தடை வேண்டாம். என்ற விடயங்களை உள்ளடக்கியதான மேற்படி தீர்மானம் வாதப்பிரதிவாதங்களையடுத்து ஏகமனதாக சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர், வடக்குமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com