சற்று முன்
Home / செய்திகள் / வண்டுகள், புளுக்களுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படவிருந்த 80 ஆயிரம் கிலோ அரிசி சிக்கியது

வண்டுகள், புளுக்களுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படவிருந்த 80 ஆயிரம் கிலோ அரிசி சிக்கியது

வண்டுகள் மற்றும் புளுக்களுடன் நுகர்வு தகுதியற்ற 80 ஆயிரம் கிலோ கிராம் அரிசி, சதொசவிற்கு சொந்தமான திஸ்ஸமஹாராம – பன்கேமுவ பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றினுள் விற்பனை செய்வதற்காக மீளவும் தயார் செய்து கொண்டிருந்த போது கொழும்பு ஊடகமான ஹிரு வழங்கிய தகவலுக்கு அமைய அந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மனித பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகையின் ஒரு பகுதி, தற்போது யாழ்ப்பணம் பகுதிக்கு விற்பனைக்காக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்மைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகமான ஹிரு சி.ஐ.ஏவிற்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொண்ட தேடுதலில் வண்டுகள் மற்றும் புழுக்களுடன் சிதைந்த, மனித பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகை சதொச ஊடாக விற்பனை செய்ய தயார்ப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இந்த அரிசி தொகை 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com