யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 17 பேருக்கு கோரோனா பயரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கோரோனா சோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் கோரேனா நோயாளிகளாக அடையாளங்காணப்பட்ட மானிப்பாய் போதகரின் வீட்டினை சூழவுள்ளவர்கள் 8 பேருக்கும் கொரோனா நோயாளிகளாக அடையாளங்காணப்பட்ட அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்களது வீட்டின் அருகிலுள்ள உறவினர்கள் 6 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே எவருக்கும் கொரேனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என உதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறிப்பிட்ட யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,
இன்று (04.04.2020) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கி இருந்தவர்கள் மூவருக்கும் (3) வைத்தியசாலைக்கு வெளியே தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடைய பதின்நான்கு (14) பேருக்கு Covid – 19 பரிசோதனை செய்யப்பட்டது. இப் பரிசோதனை மானிப்பாய் பகுதியில் எட்டு (8) பேருக்கும் அரியாலைப் பகுதியில் ஆறு (6) பேருக்கும் செய்யப்பட்டது.
ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (03.04.2020) தாவடி பகுதியில் பதினெட்டு (18) பேருக்கு சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்படும். – என்று தெரிவித்தார்