சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது !! – பிணையில் விடுதலை !!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது !! – பிணையில் விடுதலை !!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

வட்டுவாகல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ரவிகரன் இன்றையத்தினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் அஜராகியிருந்தார் . இதன் பிரகாரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரை கைது செய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றம் பிணை வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது.

அத்தோடு ஆர்பாட்டம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் ஆன்டனி ஜெகநாதன் அவர்களின் மகன் பீற்றர் இலஞ்செழியனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யபட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com