சற்று முன்
Home / செய்திகள் / யாழ் தினக்குரல் ஊடகவியலாளரிடம் ஊர்காவற்றுறைப் பொலிசார் விசாரணை

யாழ் தினக்குரல் ஊடகவியலாளரிடம் ஊர்காவற்றுறைப் பொலிசார் விசாரணை

புங்குடுதீவ மாணவி வித்தியா கொலைச் சந்தேக நபர்கள் குறித்த செய்தியொன்றினை வெளியிட்டமை தொடர்பில் யாழ் தினக்குரல் ஊடகவிலயாளர் ஹம்சன்  இன்று (05.02.2016) ஊர்காவற்றுறைப் பொலிசாரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த விசாரணை நடவடிக்கை தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மையில் மாணவி வித்தியா கொலைதொடர்பான விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றிருந்தது, அதன்போது சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கொலைச்சந்தேகநபர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்  நின்றிருந்த சில ஊடகவியளார்களிடம் தாம் வித்தியாவைக் கொலை செய்யவில்லை எனவும் புங்குடுதீவைச் சேர்ந்த பொலிஸார் ஒருவர் வேண்டும் என்றை தம்மை இந்த வழக்கில் மாட்டிவிட்டதாகவும் தாம் அவரைக் கொல்வோம் எனவும் தெரிவித்தாக வீடியோ காணொலிகளும் செய்திகளும் வெளியாகியிரு்தன.

யாழ் தினக்குரல் நாளிதழில் அவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி தொடர்பிலேயே குறித்த ஊடகவியலாளர் ஊர்காவற்றுறைப் பொலிசாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு குறித்த செய்தி எவ்வாறு பெறப்பட்டது என்ற விபரம், செய்தியின் காணொலி மூலம் என்பவற்றைப் பெற்றுக்கொண்டதாக தெரியவருகிறது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com