சற்று முன்
Home / செய்திகள் / நல்லாட்சி கூட்டணிக்குள் குழப்பம் – புதிய அரசியலமைப்பு இழுபறியில்

நல்லாட்சி கூட்டணிக்குள் குழப்பம் – புதிய அரசியலமைப்பு இழுபறியில்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக புதிய அரசியலமைப்பு அமைக்கும் முயற்சி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தில் ஐக்கிய தேசி யக் கட்சி விடாப்பிடியாக உள்ளது.. இருப்பினும், ஸ்ரீ ல.சு.க. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், அரசியலமைப்பு முழுவதையும் மாற்றத்துக்குள்ளாக்காமல் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லத் தேவையற்ற விடயங்க ளில் மாத்திரம் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்தை ஸ்ரீ.ல.சு.க. தெரிவித்து வருகின்றது. இதற்கு ஐ.தே.க. தனது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது.

இந்த இழுபறி நிலையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும் ஈடுபட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com