யூஎஸ்எயிட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் 2013 – 2018 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த செயற்றிட்டத்தின் கையளிப்பு நிகழ்வு நேற்று (24.04.2018) யாழ் நாச்சிமார் கோவிலடி கம்சிகா மகால் மண்டபத்தில் நடைபெற்றது.
யுத்தத்தில் இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு சுமார் 254 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த குறித்த செயற்றிட்டத்தின் கையளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக யூஎஸ்எயிட் நிறுவன பிரதி பணிப்பாளர் அலீனா ரென்சியும் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும் மற்றும் பிரதேச செயலர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின்போது பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு செயற்றிட்டத்திற்கு பங்களிப்பு வழங்கியிருந்த பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகத்திற்கு நினைவுக் கேடயங்களும் வழங்கப்பட்டன.