கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயகத் தேசியக் கூட்டணியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இரு கூட்டணிகளும் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே தமிழரசுக் கட்சி பல சபைகளில் முன்னிலை பெற்றிருந்தபோதும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. இந்நிலையில் சங்கு கூட்டணி தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஆகக் குறைந்தது மூன்று சபைகளையாவது தங்களுக்கு வழங்கவேண்டும் என சங்கு விடுத்த கோரிக்கையை தமிழரசுக் கட்சி தட்டிக்கழித்துவந்த நிலையில் சங்கு - சைக்கிள் கூட்டணி ஒன்றிணைந்தமை தமிழரசுக் கட்சிக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
சங்கு சைக்கிள் கூட்டணி ஒன்றிணைந்ததன் மூலம் தமிழரசு பெரும்பான்மை பெற்றிருந்த மேலும் பத்து சபைகளை இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி சபைகளைக் கைப்பற்றுவதாயின் ஈபிடிபி அல்லது ஜேவிபியின் ஆதரவை ஏதிர்பாக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழரசுக் கட்சிமீது மக்கள் அதிருப்தியுற்றிருக்கும் நிலையில் தமிழரசுக் கட்சியின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Post a Comment