முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.2009 ஆம் ஆண்டு ...
Read More »மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று 17.05.2023 பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் ...
Read More »நடராஜர் சிலையை திருடிய இராணுவச் சிப்பாய் கைது…!
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கராயன்குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் மாதாந்த விடுமுறையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் கோவிலில் உள்ள விக்கிரகத்தை திருடி ...
Read More »எரிபொருட்களின் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் ...
Read More »நித்திரையில் இருந்த இளைஞன் கழுத்தறுத்து கொலை!
இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, களுத்துறை பலதொட்ட வீதி, தேக்கவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 27 வயதுடைய இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுருத்த ...
Read More »வீதியில் நெல் உலர விடப்பட்டமையால் விபத்து – ஒருவர் உயிரிழப்பு! -பரந்தனில் சம்பவம்
பரந்தன் – பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பூநகரி கௌதாரி முனைப் பகுதியை சேர்ந்த க.றேகன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். வீதியில் நெல் பரவி உலர விட்டிருந்தமையால், வீதியின் வலது பக்கத்தால் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ...
Read More »பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது 79ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர், துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் 1999ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் நவாஷ் ஷெரிப் ஆட்சியைக் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியவர் முன்னாள் அதிபர் பர்வேஸ் ...
Read More »தாவடி பகுதியில் விபத்து – 19 வயது இளைஞன் பலி
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக பயணித்ததாகவும் அதில் வந்த மோட்டார் சைக்கிளொன்று யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் ...
Read More »மார்ச் 9 தேர்தல் வர்த்தமானி வெளியீடு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.வேட்பாளர்கள் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ...
Read More »இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 54.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் 60.1 % ஆக பதிவாகியிருந்தது.மேலும் டிசம்பரில் 64.4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் நவம்பரில் 60.1 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »