சற்று முன்
Home / செய்திகள் / வவுனியாவில் இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இவர்களின் 09 வயது மற்றும் 03 வயதுடைய பிள்ளைகள் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நடராஜர் சிலையை திருடிய இராணுவச் சிப்பாய் கைது…!

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com