சற்று முன்
Home / செய்திகள் / அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருந்து உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும், டெங்கு நோயின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் மீண்டும் வரலாறு காணாத உயர்வை பதிவு செய்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20,334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

அரசியல் கைதியான சிவ ஆரூரன் 15 வருடங்களின் பின் நிரபராதி என விடுவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com