சற்று முன்
Home / செய்திகள் / அரச சேவையிலுள்ள 20ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை

அரச சேவையிலுள்ள 20ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் அரச சேவையில் உள்ள 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்.

இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2018 – 2019 மற்றும் 2020ம் ஆண்டு காலப்பகுதியில் அரச சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக பட்டதாரிகளை இலக்காகக் கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

40 வயதிற்கு மேற்படாதவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com