சற்று முன்
Home / செய்திகள் / மாணவர்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மாணவர்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

பிபில பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் பிபில – கனுல்வெல முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களே காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லஸ்ஸ தேசிய பாடசாலைக்கு விளையாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இம் மாணவர்கள் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத காரணத்தினால், குறித்த மாணர்கள் லொறியில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com