வாஸ்து என்பதற்கு ஒத்து போதல் என்று பொருள், அதன்படி நம் வீட்டிற்கு ஒத்துப்போகக் கூடிய வகையில் ஒருசில வாஸ்து சாஸ்திரங்கள் இருக்கிறது.
மீன்களை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்க்கக் கூடாது, ஏனெனில் அதனால் மன அமைதி குறைந்து, கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.
மீன் தொட்டி வைப்பது என்பது பழமையான ஒரு முறையாகும், வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம் என்று எவ்வித வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை.
ஏனெனில் வாஸ்து ஆராய்ச்சியின் படி, மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் தருவதில்லை, ஆனால் அதற்கு மாறாக வீட்டில் உள்ள யாருக்காவது உடல்நிலை பாதிப்பு தான் ஏற்படுகிறது.
எனவே வீட்டில் மீன் தொட்டி வைப்பது நல்லதல்ல, அதனால் மீன் தொட்டியை அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்க்கலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.