"16வது தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வுடன்" இணைந்து முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று (19) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
அதன்படி, இலங்கை கடற்படையில் 22 அதிகாரிகளுக்கும், 1,256 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
மேலும், இலங்கை விமானப்படையில் 9 அதிகாரிகளுக்கும், 868 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்தது.
16வது தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வுடன் இணைந்து, இலங்கை இராணுவத்தில் 186 அதிகாரிகளுக்கும், 10,093 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.
Post a Comment